புதன், 25 ஜனவரி, 2012

தொடர்-3



قال رسول اللّه صلَّى اللَّه عليه و سلَّم :  مَنْ مَّاتَ يُشْرِكْ بِاللَّهِ شَيْئاً دّخَلَ النَّاَرَ 
 ( بخاري)

இப்னு மஸ்வூத் ( ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்விற்கு எதையாவது இணை வைத்தவராக மரணித்தால் அவர் நரகம் செல்வார்  என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல் : புகாரி


குஃப்ர் எனும் காரிருள் நீங்கி ஏகத்துவம் எனும் ஒளி மீண்டும் மலர்நதது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இஸ்லாத்தை மறந்த முஸ்லிம் அரசர்கள் மார்க்கம் எனும் பெயரில் எதைப் பின்பற்றினார்களோ, அதையே அவர்களால் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் ஜிஸ்யா வரி செலுத்த மணமின்றி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களுக்கும் மார்க்கமாக்கினார்கள், இந்தியாவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களும் இதனடிப்படையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய பெயரால் ரபியுள் அவ்வல் மாதத்தில் ஓதும் மௌலூதை மார்க்கமாக ஏற்றுக் கொண்டார்கள்.

இவ்வாறாக உமையாக்கள், அதற்கடுத்து, அப்பாஸியாக்கள், அதற்கடுத்து உதுமானியர்கள் என்று இஸ்லாமிய ஆட்சி கை மாறி, மாறி ஹிஜ்ரி 11ம் நூற்றாண்டுகளில் மக்காவை அடுத்த தாயிஃப் போன்ற நகரங்களில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுடைய பெயரிலும், எமன் பிரதேசத்தில் இப்னு அள்வர் என்பவருடைய பெயரிலும், மிஸ்ரு பிரதேசத்தில் ரிஃபாயி, செய்யது பதவி என்பவருடைய பெயரிலும், ஈராக்கில் ரசூலுல்லாஹ் குடும்பத்தினருக்கும் வழிபாட்டுத் தலங்கள் உருவாக்கப்பட்டு வணங்கி வந்தார்கள் இன்னும் ஜின்களை வழிபடக் கூடியவர்களாகவும், ஜின்களுடைய பெயரில் அறுத்துப் பலியிடுபவர்களாகவும், இன்ன கலீஃபா இன்ன மரத்தடியில் அமர்ந்தார்கள் என்றுக்கூறி பெரும், பெரும் மரங்களையும் சுற்றி வலம் வந்தார்கள் மொத்த அரபுலகும் இணை வைத்து வணங்கும் நிலைக்கு ஹிஜ்ரி 12ம் நூற்றாண்டில் மாறி விட்டிருந்தது.

இந்த நிலை உருவானதற்கு முஸ்லீம் நாடுகளை ஆட்சி செய்த முஸ்லீம் பெயர் தாங்கி அரசர்கள் இறைச் சட்டத்தை ஓரம் கட்டியது தான் காரணம் .

இவைகள் எவ்வாறு மீண்டும் துடைத்தெறியப்பட்டு சவுதியில் இஸ்லாமிய ஆட்சி மலர்ந்தது ?
ஹிஜ்ரி 1115ல் சவுதி அரேபியா அல் கஸீம் மாகாணத்தில் ' உஐனா ' என்ற கிராமத்தில் உள்ள அப்துல் வஹாப் அவர்களுடைய குடும்பத்தினர் ஏகத்துவத்தைப் பின்பற்றி வாழ்ந்தார்கள்.

அப்துல்வஹாப் அவர்களுடைய மகன் கண்ணியத்திற்குரிய முஹம்மது அவர்கள் 10 வயதில் குர்ஆனை மணனம் செய்து முடித்தார்கள். அவர்கள் தனது 20 வயது இளமைப் பருவத்தில் அல்லாஹ்வுடைய ஏகத்துவ மார்க்கத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து இணைவைத்தலை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று தனது தந்தை அவர்களிடத்தில் ஆலோசனை கேட்டார்கள். அதற்கவர்கள் நாமும், நமது குடும்பத்தித்தினரும் ஏகஇறைவனை மட்டும் தான் வணங்கி வருகிறோம் அவ்வாறே தொடர்ந்து செய்வோம் ஊரில் உள்ள இணைவைத்தலை ஒழிக்க புறப்பட்டால் இன்று இருக்கக் கூடிய சூழ்நிலையில் நம்மை ஒழித்துக் கட்டி விடுவார்கள் என்றுக் கூறி அவர்களது முயற்சியை தடு;த்து நிருத்தி விடுகிறார்கள்.

ஆனாலும் அவர்களுடைய மணதில் ஏகத்துவத்தை நிலை நிருத்த வேண்டும் என்ற சிந்தனை அதிவேகமாக பரவுகிறது அப்பொழுது அவர்களுடைய தகப்பனார் இறந்து விடுகிறார்கள். 

இஸ்லாமிய சட்டத்தை ஓறிரு குடும்பத்தினர் மட்டும் ஒளிந்து, மறைந்து பின்பற்றுவதை விட ஆட்சியாளர்களிடம் எடுத்துச் சென்று அவர்கள் மூலமாக அரசியல் சாஸன சட்டமாக்கி விட்டால் இடையூறு இல்லாமல் மொத்த மக்களும் பின்பற்றுவதற்கு வசதியாக இருக்கும் என்பதாலும், மேலும் இது தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் நடைமுறைப் படுத்தப்பட்ட முறை என்பதால் முதலில் ஆட்சியாளர்களை சந்தித்து தனது திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்க முயற்சிக்கிறார்கள் கண்ணியத்திற்குரிய முஹம்மது அவர்கள்.

முதலில் தான் பிறந்து வளர்ந்த அல்கசீம் மண்டல கவர்னரிடம் ஏகத்துவத்தை எடுத்துக் கூறி  ஏகத்துவ ஆட்சியை பிரகடன படுத்தச் சொல்கிறார்கள். இதைக்கேட்ட கவர்னர் அதை நிராகரித்ததுடன் அவர்களை நாடு கடத்தவும் உத்தரவிடுகிறார் ஏகத்துவத்தை சொன்னால் இதெல்லாம் நடக்குமென்று ஏற்கனவே அறிந்திருந்த கண்ணியத்திற்குரிய முஹம்மது அவர்கள் அதை சகித்துக்கொண்டு அல்லாஹ்விடத்தில் அழுது மன்றாடியவர்களாக சொந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்து அன்னிய தேசத்திற்கு நஜ்த் ( ரியாத் ) பிரதேசத்தை  நோக்கி செல்கிறார்கள்.

கடந்த கால ஆட்சியாளர்கள் இஸ்லாமிய சட்டத்தை ஓரம் கட்டியதால் ஏற்பட்ட விளைவுகளே மேற்கானும் கப்ரு வணக்கம் உருவாகியது என்பதை அறிந்திருந்த கண்ணியத்திற்குரிய முஹம்மது அவர்கள் முதலில் ஆட்சியாளர்களை பக்குவப்படுத்தி அவர்கள் மூலம் மக்களுக்கு ஏகத்துவத்தை கொண்டு செல்ல வேண்டும்  என்;ற இலக்கில் பின் வாங்காமல் உறுதியாக நின்று '' திரய்யா '' ( ரியாத் ) கவர்னர் முஹம்மது பின் சவுத் அவர்களை சந்தி;த்து ஏகத்துவத்தை எடுத்துக்கூறி இஸ்லாமிய ஆட்சியை பிரகடனப் படுத்தக் கூறுகிறார்கள்.

இதைக் கேட்டதும் முதலில் மறுக்கிறார்கள் ஆனாலும் சீரழிந்து போயுள்ள சமுதாயத்திற்கு முட்டுக் கொடுப்பதற்கு அரசு அதிகாரத்தின் மூலமல்லாது தனித் தனி நபராக சந்தித்து அவர்களை ஒருங்கிணைத்து செல்வதற்குள் அரசியல் மாற்றம் ஏற்பட்டு புதிய ஆளுனர் மூலம் அதை பலப்பிரயோகம் செய்து முடக்கி விடலாம் அதனால் மார்ப்பற்றுள்ள உங்களைப் போன்ற ஆளுனருடைய ஒத்துழைப்பு அவசியம் தேவை என்பதை மீ;ண்டும்; வலியுருத்திக் கூறவே அல்லாஹ்வும் இந்த கூட்டு முயற்சியை வெற்றி பெறச்செய்கிறான் முஹம்மது பின் சவூத் அவர்கள் சம்மதிக்கிறார்கள்.

கண்ணியத்திற்குரிய இமாம் முஹம்மது பின் அப்துல் வஹாப் அவர்களும், நஜ்த் கவர்னர் முஹம்மது பின் சவூத் அவர்களும் இணைந்து இணை வைத்தலுக்கெதிரான கிளர்ச்சியில் இறங்குகிறார்கள் முதல் கட்டமாக 'திரய்யா'வில் உள்ள கப்ருகளும், இணைவைப்பு மரங்களும் தகர்த்தெறியப் படுகின்றன, அதற்கடுத்து அரசியல் சாஸன சட்டமாக இஸ்லாம் பிரகடனப் படுத்தப்படுகின்றது.

மது, மாது, சூது, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி அனைத்தும் தடை செய்யப்பட்டு, இதை மீறுவோர் மீது இஸ்லாமிய குற்றவியல் சட்டம் நடைமுறைப் படுத்தப் படுகிறது.

இது உலகம் முழுவதும் காட்டு தீ போல் பரவுகிறது.
மொத்த உலகிலிருந்தும் கடும் எதிர்ப்பு கனைகள் திரய்யாவை நோக்கிப் பாய்கிறது,

தர்ஹா ட்ரஸ்டிகளெல்லாம் கொதித்தெழுகிறார்கள், அவர்கள் புதிய மார்க்கத்தை கொண்டு வந்திருக்கின்றார்கள், அவர்களை ஒழித்துக் கட்டுங்கள் என்று ஆவேசமாக கூக்குரலெழுப்புகின்றார்கள்.

இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா ?

உலகம் முழுவதிலிமிருந்து எழுந்த எதிர்ப்பு குரல்களில் முதலில் ஒலித்தது இந்திய முஸ்லீம்களின் குரல் தான் என்பதுடன் அந்த மாமேதை அவர்களுக்கும் அவர்களை பின்பற்றுவோருக்கும் '' வஹ்ஹாபி '' என்கின்ற பட்டப் பெயரை சூட்டி மகிழ்ந்ததும் இந்திய முஸ்லீம்கள் தான்.

இன்றும் ஏகத்துவ அறிஞரையும் அவரது பிரச்சாரத்தால் கவரப்பட்டவர்களையும் ''வஹ்ஹாபிகள்'' என்றுரைப்பதற்கு இதுவே காரணமாகும்.

இவ்வாறு உலகம் முழுவதிலிமிருந்து எழுந்த எதிர்ப்பின் காரணத்தால் நஜ்த் மீண்டும் கப்று வணங்கிகளால் கைப்பற்றப்படுகிறது, ஆனாலும் அவர்கள் விடாமல் போராடி இணைவைப்பாளர்களிடமிருந்து மீண்டும் திரயா கோட்டையை கைப்பற்றி விடுகிறார்கள். இவ்வாறாக ஒன்றிரண்டு முறை மாறி, மாறிச் சென்றாலும் அதற்கடுத்து வந்த மன்னர் அப்துல் அஜூஸ் அப்துல் ரஹ்மான் பின் சவூத் அவர்கள்  முன்னவர்களுடைய தவ்ஹீத் அடிப்படையிலான ஆட்சியை நடைமுறைப்படுத்தி  வீர தீரத்துடன் போரிட்டு சுற்றியுள்ள அனைத்து சிறு, சிறு அரசுகளையும் கைப்பற்றி அவற்றில் ஏகத்துவ ஆட்சியை அமல் படுத்தினார் ரஹிமல்லாஹூ அன்ஹூ.

இதை டாக்டர் அப்துல் ஹக்கீம் இப்னு அப்துஸ் ஸலாம் மதனி அவர்கள் எழுதிய 'தவ்றுல் மம்லக்கத்துல் அரபியத்துஸ் ஸவுதியா ஃபீ ஹிக்மத்துல் இஸ்லாம் ' எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள். இந்த வரலாற்று நூல் சவுதி அரேபியாவின் பிரபல நூலகங்களிலும் அரபியில் இருக்கிறது.

இத்தொடரில் கண்ணியத்திற்குரிய இமாம் முஹம்மது பின் அப்துல் வஹாப் அவர்களுடைய ஏகத்துவ பிரச்சாரம் ஏன் சேர்க்கப்பட்டது ? என்பதை அல்லாஹ் நாடினால் எழுதுவோம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக