புதன், 25 ஜனவரி, 2012

தொடர்-4



الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا
...இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை  உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்;. எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன்;. இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப பொருந்திக் கொண்டேன். ... 5:3


ஃபாத்திமியீன்களின் ஆட்சி காலத்தில் தான் மௌலூது ஆரம்பிக்கப்பட்டது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய காலத்திலும், ஸஹாபாக்கள் காலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த இஸ்லாமிய சட்டம் ஒதுக்கப்பட்டு, ஏகத்துவ அறிஞர்களுடைய குரல்களும் ஒடுக்கப்பட்டதால் யூத, கிரேக்க, ஹிந்து மத அத்வைத கொள்கைகள் புதிய அறிஞர்களிடத்தில் தோன்றி அவைகள் இஸ்லாமிய நாடுகளில் மார்க்கம் என்று 10 நூற்றாண்டுகளுக்கு மேல் கோலோச்சியது.

இருண்ட 10 நூற்றாண்டுகளில் ஒரு சில ஏகத்துவ சிந்தனை கொண்ட அறிஞர்கள் அவ்வப்போது தோன்றினாலும் அவர்களுடைய பிரச்சாரம் மக்களிடம் சென்று வலிமை அடைவதற்கு முன் அதை அரசு இரும்புக் கரம் கொண்டு தடுத்து நிருத்தி விடும்.

அதனால் கண்ணியத்திற்குரிய இமாம் முஹம்மது அப்துல் வஹாப் அவர்கள் அரச அதிகாரத்தில் இஸ்லாமிய நன்னெறியை புகுத்தி விடுவதற்காக தொடர்ந்து அரும் பாடுபட்டு அதில் வெற்றி கண்டார்கள்.

இதன் மூலம் அரசு அதிகாரிகளுக்கும், அறிஞர்களுக்கும் மத்தியில் மாபெரும் இணக்கம் ஏற்பட்டது எந்தளவுக்கென்றால் அறிஞர்களுடைய குரலே அரசர்களுடைய குரலாக அரசவையில் ஒலிக்கத் தொடங்கியது, எந்த ஒரு புதிய சட்டமும் மார்க்க அறிஞருடைய ஆலோசனையின்றி அரசவையில் இயற்ற முடியாது என்ற நிலை வளைகுடா யுத்தம் வரை நீடித்தது.

இப்பொழுது அந்த நிலை காலச் சூழ்நிலையால் மாற்றம் ஏற்பட்டாலும் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அந்த நிலை உருவாகும், உருவாக வேண்டுமென்றால் அதற்கான ட்ராக் இது தான் என்று கண்ணியத்திற்குரிய இமாம் முஹம்மது அப்துல் வஹாப் அவர்களால் போடப்பட்டு விட்டது.

இப்பொழுது விஷயத்திற்கு வந்து விடுவோம்.

மூன்று கட்டமான இஸ்லாமிய ஆட்சி காலம் எவ்வாறு இருந்தது என்பதை குறிப்பிட்டோம்.

அதில் முதலாவதாக,
நபிகள் நாயகம்(ஸல்)அவர்களுடைய ஆட்சிகாலமும், அதையொட்டிய ஸஹாபாக்களுடைய ஆட்சி காலம்,

அதற்கடுத்து இரண்டாவதாக,
முஸ்லிம் பெயர் தாங்கி அரசர்களுடைய ஆட்சி காலம்,

அதற்கடுத்து மூன்றாவதாக,
இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹாப் அவர்களால் மறுமலர்ச்சி அடைந்த ஏகத்துவ ஆட்சிகாலம்.

மேல்படி மாறுபட்ட மூன்று காலகட்டத்தில்
எந்த காலகட்டத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பெயரால் மௌலூது அறிமுகமாகியது ? அது ஏற்புடைய காலகட்டமா ? என்பதை சிந்தித்துக் கொள்ள வேண்டும்;.

அதிலும் குறிப்பாக ஃபாத்திமியீன்கள் காலத்தில் தான் மௌலூது முதன் முதலாக அறிமுகப் படுத்தப்பட்டது என்பது குறிப்பிட தக்கது. அந்த ஃபாத்திமியீன்கள் என்றால் பாத்திமா(ரலி) அவர்களுடைய வாரிசுகள் என்று அர்த்தம். பாத்திமா(ரலி) அவர்களுடைய வாரிசுகள் யாராக இருக்க முடியும் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இருக்காது. அவர்கள் வடிகட்டிய ஷியாக்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அவர்கள் அலி(ரலி) அவர்களுடைய காலத்தில் உருவாகி அவர்களை துதி பாடக்கூடிய கூட்டமாக மாறியவர்களை அலி(ரலி) அவர்களே துடைத்தெறிந்து விட்டார்கள் எஞ்சிய ஒன்றிரண்டு ஷியாக்களால்  அலி(ரலி) அவர்களும் ஷஹீதாக்கப் பட்டார்கள்.

அலி(ரலி) அவர்களை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து இனப் பெருக்கமானவர்கள் தங்களை அலி(ரலி) அவர்களை கொலை செய்தவர்கள் என்று இனம் கண்டு கொண்டால் மீண்டும் கலையெடுக்கப்பட்டு விடுவோம் என்று கருதியவர்கள் ஃபாத்திமியீன்கள் என்று பெயரிட்டுக் கொண்டார்கள் பெயர் தான் மாற்;றப்பட்டது அவர்கள் அலி(ரலி) அவர்களைக் கொலை செய்தவர்களின் வாரிசுகள் தான், கொள்கை ஒன்று தான்.

கடைந்தெடுத்த ஷியாக்களால் தான் முதன் முதலில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பிறந்த நாள் கொண்டாட்டம் அறிமுகப் படுத்தப் பட்டது.

இறுதியாக கெய்ரோவில் நெப்போலியன் படையினர் பேண்ட் வாத்தியங்கள் முழக்கத்துடன் எகிப்திய முஸ்லீம்கள் பிறந்த நாளை  ஊர்வலமாக நடத்தினார்கள். நடனம், ஊர்வலம் என்பனவெல்லாம் அன்றைய வடிகட்டிய ரோமானிய கலாச்சாரம் என்பதால் தான் அன்றும், இன்றும் அதற்கு விழா என்ற பெயர் சூட்டப்பட்டது. 

கடந்த காலத்தில் மீலாது விழாவை அரசே பொறுப்பேற்று விமர்சையாக செய்ததால் தான் இன்றளவும்   முஸ்லிம் அரசியல் வாதிகள் மீலூது விழாவை நெப்போலியன் ஸ்டைலில் ( பேண்டு, வாத்தியம் மட்டும் தவிர்த்து) ஊர்வலமாக நடத்துகிறார்கள்.

மீலாது விழாவை அரசியல் வாதிகள் ஊர்வலமாக நடத்தியதை பார்த்த உலமாப் பெருமக்கள் ஹிஜ்ரி 570ல் உமர் அல் மலாஇ ஸ்டைலில் புகழ் மாலையாக ஏக இறைவனுடைய ஆலயங்களிலும், தங்களது வீடுகளிலும் ரபியுள் அவ்வல் மாதம் முழுவதும் மொலூது ஓதுகிறார்கள்.

இதைப் பார்த்த கப்று வணங்கிகள் உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்றுக் கூறி தத்தமது பகுதிகளில் அடங்கியுள்ள பிரபல அவ்லியா(?)க்கள் பெயரிலும் மௌலூது ஓதி பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த புகழ் மாலையை அரபியில் ஓதுவதற்கு ஆலிம்களே  தகுதியானவர்கள் என்றுக்கூறி பாமர மக்களை நம்ப வைத்து தங்களுக்கு தொழிலாக்கினார்கள். 

நபிகள் நாயகத்திற்கு மரியாதை கொடு;க்கிறோம் என்றுக் கூறி ஆரம்பித்த மொலூது இந்தியாவின் மூலை முடுக்குகளில் மொய்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி, நாகூர் சாகுல் ஹமீது பாஷா, ஏர்வாடி இப்றாஹீம்ஷா, என்று தொடங்கி இன்னும் பட்டி, தொட்டி குக்கிராமங்களில் அடங்கியுள்ளதாக கூறும் அனைத்து அவ்லியாக்களுடைய பெயராலும் ஓதப்படுவது கடமையாக்கப் பட்டு விட்டது.

இதுவரை மௌலூதுடைய பரினாம வளர்ச்சியை மட்டும் பார்த்தோம் மௌலூதுடைய வாசகங்களைப் புரட்டினால் ஒவ்வொரு வரிகளும் 23 வருடங்கள் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து கட்டியெழுப்பிய தவ்ஹீத் கோட்டையின் ஒவ்வொரு தூண்களும் மொலூது புகழ் மாலையின் ஒவ்வொரு வரிகளால் தகரந்து விடும் அளவுக்கு அமைந்திருப்பதைக காணலாம்.

நபி(ஸல்) அவர்கள் மீது எவ்வாறு மரியாதை செலுத்துவது என்பதை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு சொல்லித் தராமல் விட வில்லை.


                         لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. திருக்குர்ஆன் 33:21.   



 قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ
நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால், என்னைப் பின் பற்றுங்கள்; ! அல்லாஹ் உங்களை விரும்புவான்; உங்கள் பாவங்களை மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக ! 3:31.              

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை எவ்வாறு மதிப்பது என்பதை அல்லாஹ் நாடினால் அடுத்து எழுதுவோம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக